search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாரி உரிமையாளர்கள் போராட்டம்"

    • ஆலை நிர்வாகத்திடம் வாடகை உயர்த்தி தர கோரிக்கை வைத்து வந்தனர்.
    • கோபிநாதம்பட்டி போன்ற பகுதிகளில் இருந்தும் போலீசார் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க குவிக்கப்பட்டனர்.

    பாப்பிரெட்டிப்பட்டி:

    தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி அருகே அரசுக்கு சொந்தமான கோபாலபுரம் சுப்பிரமணிய சிவா சர்க்கரை ஆலை கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது.

    இந்த ஆலைக்கு தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக கரும்பு அரவைக்கு அனுப்பி வைக்கின்றனர். இந்த ஆலையின் அரவை சில வாரங்களுக்கு முன்பு மாவட்ட கலெக்டர் சாந்தி மற்றும் மக்கள் பிரதிநிதிகளால் தொடங்கி வைக்கப்பட்டது.

    ஆலை அரவை தொடங்கிய நாள் முதலாக கரும்பு லோடு ஏற்றி வரும் வாகனங்களுக்கு வாடகையை உயர்த்தி தர வேண்டுமென லாரி உரிமையாளர், பாரம் ஏற்றி செல்லும் வாகன உரிமையாளர்கள் தொடர்ந்து ஆலை நிர்வாகத்திடம் வாடகை உயர்த்தி தர கோரிக்கை வைத்து வந்தனர்.

    ஆலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி நேற்று இரவு ஆலைக்குள் லோடு ஏற்றி வந்த 150 க்கு மேற்பட்ட கனரக வாகனங்கள், அரவைக்கு இறக்கி வைக்காமல் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக ஏ.பள்ளிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, கோபிநாதம்பட்டி போன்ற பகுதிகளில் இருந்தும் போலீசார் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க குவிக்கப்பட்டனர்.

    உடனடியாக அரூர் டி.எஸ்.பி. ஜெகநாதன் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.

    ஆலையில் மேலாண்மை இயக்குனர் பிரியா போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதில், தங்களது கோரிக்கையை சில தினங்களில் பேச்சு வார்த்தை மூலமாக தீர்த்துக் கொள்ளலாம் என்று கூறினார்.

    இதைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்று அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் இரவு 7 மணி முதல் 10 மணி வரை கரும்பு அரவை லோடு இறக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. பின்பு வழக்கம்போல ஆலைகள் செயல்பட தொடங்கியது.

    இந்த திடீர் போராட்டத்தால் ஆலை வளாகப் பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது.

    • கட்டண உயர்வால் லாரி, வேன் மற்றும் சரக்கு வாகனங்கள் வாடகை கட்டணமும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
    • ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் டீசல் விலை உயர்வு, இன்சூரன்ஸ் கட்டணம் உயர்வு உள்பட பல்வேறு விலை உயர்வால் லாரி தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கீழ் வருகிறது. சுங்கசாவடிகளையும் அந்த அமைச்சகமே தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைத்து கட்டணம் வசூல் செய்ய அனுமதி அளித்து வருகிறது. நாடு முழுவதும் 566 சுங்க சாவடிகள் உள்ளன.

    தமிழகத்தில் மட்டும் 49 சுங்க சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு ஒரு முறை 5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதம் வரை உயர்த்தி வசூலிக்கப்படுகிறது. மத்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தபடி 1992-ம் ஆண்டு போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மாதமும், 2008-ம் ஆண்டு போடப்பட்ட சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் சுங்க சாவடிகளில் 5 முதல் 10 விழுக்காடு வரை கட்டணத்தை உயர்த்தி வசூலிக்குமாறு நெடுஞ்சாலை ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியது.

    அதன்படி கார், ஜுப், வேன் உள்பட வாகனங்களுக்கு பழைய கட்டணம் ரூ.95 என்பது ரூ.5 உயர்ந்து ரூ.100 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.மினி பஸ் உள்பட வானங்களுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.165 ஆகவும், பஸ் டிரக் உள்பட வாகனங்களுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.345 ஆகவும், எச்.சி.எம். வாகனங்களுக்கு ரூ.30 அதிகாரித்து ரூ.540 ஆகவும், ஓவர் சைஸ் வாகனங்களுக்கு ரூ.625-ல் இருந்த ரூ.30 உயர்ந்து ரூ.655 ஆகவும் உயர்த்தி வசூலிக்கப்படுகிறது.

    அதன்படி நாடு முழுவதும் உள்ள 460 சுங்கசாவடிகளில் இந்த கட்டண உயர்ல் அமுலுகு வந்துள்ளது. தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டம் சூரப்பட்டு, சென்னை வானகரம், திண்டிவனம், சேலம் ஆத்தூர், போகலூர், புதுக்கோட்டை மாவட்டம் பூதக்குடி, சென்னை சமுத்திரம், சிட்டம்பட்டி, எட்டூர் வட்டம், கணியூர், கப்பலூர்டி, கீழ்குப்பம், கிருஷ்ணகிரி, லெம்பாலக்குடி, லெட்சுமணப்பட்டி, மாத்தூர, நெல்லூர், நாங்குநேரி, ஸ்ரீ பெரும்புதூர், பள்ளிகொண்டா, பரனூர், பட்டறை பெரும்புதூர், புதுக்கோட்டை வாகைகுளம், எஸ்.வி.புரம். சாலை புதூர், செண்பகம்பேட்டை, திருப்பாச்சேத்தி, வாணயம்படி ஆகிய சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.

    இந்த கட்டண உயர்வால் லாரி, வேன் மற்றும் சரக்கு வாகனங்கள் வாடகை கட்டணமும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இனி வரும் நாட்களில் அத்தியாவசிய பொருட்களும் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் சுங்கச்சவாடிகள் முன்பு லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி இன்று காலை இந்த சுங்கசாவடிகள் முன்பு லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாமக்கல்லில் கீரம்பூர்டி சுங்க சாவடியில் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தன்ராஜ் தலைமையில் நடந்த போராட்டத்தில் ஏராளமான லாரி உரிமையாளர்கள், மணல் லாரி, டேங்கர் லாரிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

    ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் டீசல் விலை உயர்வு, இன்சூரன்ஸ் கட்டணம் உயர்வு உள்பட பல்வேறு விலை உயர்வால் லாரி தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது சுங்க கட்டண உயர்வால் தொழில் மேலும் நலிவடையும் உள்ளது. இதனால் காலாவதியான சுங்கசாவடிகளை உடனடியாக அகற்ற வேண்டும், சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். மேலும் விரைவில் சுங்க கட்டண உயர்வை கண்டித்து தொடர் போராட்டம் நடத்தப்படும் என்றும் லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

    திருத்துறைப்பூண்டியில் லாரி உரிமையாளர்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் லாரிகள் மூலம் சேமிப்பு மையங்கள், அரவை ஆலைகளுக்கு கொண்டு செல்லப்படுவது வழக்கம்.

    இந்த பணிகளில் ஈடுபடும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு கொடுக்கப்படும் தொகையை அரிசி ஆலை உரிமையாளர்கள் கொடுக்க மறுப்பதாக குற்றம் சாட்டி லாரி உரிமையாளர்கள் திருத்துறைப்பூண்டியில் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 56 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று லாரி உரிமையாளர்கள் திருத்துறைப்பூண்டி பள்ளங்கோவில் பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்துக்கு நெல் ஏற்ற வந்த அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு சொந்தமான லாரிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல கொக்கலாடி பகுதியிலும் லாரிகளை மறித்து போராட்டம் நடந்தது.

    போராட்டத்தில் லாரி உரிமையாளர் சங்க தலைவர் ஆறுமுகம், கவுரவ தலைவர் விஸ்வநாதன், செயலாளர் சீனிவாசன், துணைத்தலைவர் சேகர், துணை செயலாளர் குணசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. திருத்துறைப்பூண்டி பகுதியில் லாரி உரிமையாளர்கள் நேற்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    ×